முன்னோட்டம் - II

காமிக்ஸ் அன்பர் சமூகத்திற்கு வணக்கம்.  சென்ற பதிவில் ராணி காமிக்ஸ் காலகட்டத்தை வரையறுப்பது பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டோம், இப்போது அதை தொடருவோம்.  அனேகமாக கருத்து பகிர்ந்த ஏனயருடன்  என்னுடைய கருத்தும் ஒத்து போவதில் ஆச்சர்யம் இல்லை.

எனவே, என் மதிப்பில், அந்த மூன்று கால கட்டங்கள்:

  • பொற்க்காலம்: # 1 (ஆகஸ்ட் '84) - # 90 (மார்ச் '88)

திரு.ராமஜெயம் பொறுப்பில் வெளி வந்த முதல் 90 இதழ்கள்.  தரமான மொழிபெயர்ர்பு, சர்வதேச கதாநாயகர்கள், மட்டும் இல்லாமல் கவ்பாய் கதைகள், போர் காவியங்கள், விஞ்ஞான கதைகள், என்று வீர பவனி வந்த கால கட்டம்.  முத்து காமிக்ஸின் பாரம்பரியம், மற்றும் லயன் காமிக்ஸின் நவீனத்துவத்துக்கு, சரியான போட்டி கொடுத்த வருடங்கள்.

நான் தமிழ் படிக்க கற்று கொண்ட அந்த ஆரம்ப கால புத்தகங்கள் உட்பட, என்னுடைய வாரம் ஒரு ரூபாய் கை செலவு பணத்தில் என்னால் பெருமையுடன் புது புத்தக கடைகளிலேயே வாங்க முடிந்த இதழ்கள் அடங்கிய காலம்.

அந்த கால கட்டங்களில் லயன் மற்றும் முத்து காமிக்ஸின் 2,3 ரூபாய் விலைகள் அடங்கிய இதழ்கள், என்னை பொறுத்த வரை உயர் குடி மக்களுக்கு விதிக்க பட்டது என்ற எண்ணம் கூட இருந்தது :))

இக்காலத்தில் வெளி வந்த புகழ் பெற்ற கதாநாயகர்கள்
(அவர்கள் அறிமுகம் ஆன வரிசைக்கு ஏற்ப):

ஜேம்ஸ் பாண்ட்James BondJames Bond மூன்று குதிரை வீரர்கள்Three CowboysThree CowBoys கிட் கார்சன்Kit KarsonKit Karson டைகர்TigerTiger
சாகச வீரர் ஜானி மன்னர் பீமா இன்ஸ்பெக்டர் ஆசாத் புரட்சி பெண் ஷீலா
Johnny HazardJohnny Hazard BeemaKing Beema Inspector  AazaadInspector Aazaad SheelaAxa
ப்ரூஸ் லீ பில்லி ராயன்
Bruce LeeBruce Lee BillyBilly Buck RyanBuck Ryan

அனைவரும் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்றாலும், மிகவும் பிடிக்கும் என்ற வகையில், என் மனம் கவர்ந்த நாயகர்கள்:

  • ஜேம்ஸ் பாண்ட் (சந்தேகமே இல்லாமல்),
  • டைகர் (டொட்ட-டாங்  என்று அவர் கூறும் பாங்கே அலாதி),
  • மூன்று குதிரை வீரர்கள் (ஒற்றை கண் நபர், ஆரம்ப இதழில், வானத்தில் நட்சத்திரம் பார்த்து twinkle,twinkle பாட்டு படிக்கும் கட்டம், இன்றும் நினைவில் தங்கும் விஷயம்)

  • வசந்தக்காலம்: # 91 (ஏப்ரல் '84) - # 288 (ஜூன் '96)

சந்தேகமே இல்லாமல் திரு.அ.மா.சாமி என்ற "ஆமா சாமி" பொறுப்பற்ற கால கட்டம்.  ராமஜெயம் விட்டு சென்ற நல்ல அடித்தளத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல், அவர் மனம் போன போக்கில் கதை கருக்களை கொன்று, கொத்து கரி போட்ட சமயம்.  ஆனாலும், ஜேம்ஸ் பாண்டு போன்ற கதாபாத்திரத்தின் துணையுடன், ராமஜெயம் காலத்தில் அறிமுகமான மற்ற கதாபாத்திரங்களின் மீதம் உள்ளம் கதைகளோடு,  இன்னும் பல உலக புகழ் பெற்ற கதாநாயகர்களை அறிமுக படுத்தியதால், இதை வசந்த காலம் என்று கொள்ளலாம். 

இதன் கால கட்டம் எது வரை என்பதில் கட்டாயம் காமிக்ஸ் ஆர்வலர்களிடையே வெவ்வேறு கருத்துக்கள் எழலாம்.  ஆனால் என்னை பொறுத்த வரை, ஐரோப்பா கதைகள் மட்டும் இல்லாமல், ஏற்கனேவே இந்திரஜால் காமிக்ஸ் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகி இருந்த அமெரிக்கா கதாபாத்திரங்களை (King Features Syndicate) துணைக்கு அழைத்து கொள்ளப்பட்ட இதழ் 288 வரையிலான ராணி காமிக்ஸ், இவ்வட்டத்துக்குள் சரியாக பொருந்தும்.

ஏற்கனவே வெளியான கதாநாயகர்களுடன், இக்காலத்தில் வெளி வந்த புகழ் பெற்ற கதாநாயகர்கள்:

தில்லான் பக் ஜோன்ஸ் சிஸ்கோ கிட் மாடஸ்டி பிளைசி மாயாவி
Thillon Thillon Buck Jones Buck Jones Cisko Kid Cisco Kid Modesty Modesty Blaise Phantom Phantom
ஃபிளாஷ் கார்டன் ரிப் கிர்பி மான்டிரேக் முரட்டு காளை கார்த்
Flash Gordon Flash Gordon Rip Kirby Rip Kirby Mandrake Mandrake Garth Garth

இவர்களில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் பற்றி சொல்லவும் வேண்டுமா,  எல்லோரையும் போல:

  • மாடஸ்டி பிளைசி (அழகு, வீரம், மெல்லிய நட்பு கலந்த பெண்ணோவியம்)
  • மாயாவி (நம்மை கானகங்களுக்கே கொண்டு செல்லும் கதை பாங்கு)
  • மான்டிரேக் (அவர் மாளிகையை அடைய கடக்கும் முஸ்தீபுகள் போதாதா?)

  • இருண்டக்காலம்: # 289 (ஜூலை '96) - # 500 (ஏப்ரல் '05)

ராணி காமிக்ஸ் என்ற சகாப்தத்திற்கு சாவு மணி அடிக்க தொடங்கிய கால கட்டம்.  அதற்க்கு முத்தாய்ப்பு  வைப்பது போல, "கரும் புலி" என்ற கதாநாயகர் அறிமுகம் ஆனது 289 வது இதழில் தான்.  இவருக்கு போட்டியாக வடக்கில் வெளியான இன்னும் பல மொக்கை கதாபாத்திரங்களை தேடி பிடித்து தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களை திரு.அ.மா.சாமி வெறுப்பேற்றி ஓட வைத்த தருணம்.

போதா குறைக்கு, வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்த 1990 க்கு முந்தய ராணி காமிக்ஸ்களை திரும்பவும் மறுபதிப்பு என்ற பெயரில் தரம் குறைத்து வெளியிட்ட கால கட்டம்.  கடைசி நேரத்தில், வண்ண மயமாக இதே கதைகளை மூன்றாம் பதிப்பு வேறு பதித்து, பொறுமையை மிகவும் சோதித்த காலமும் இதுவே.  ராணி காமிக்ஸின் தரம் குறைய காரண கர்த்தாவான திரு.அ.மா.சாமி, அதை புதைகுழியில் தள்ளும் 500 வது இதழ் வரை பொறுப்பேற்று இருந்தது ஒரு கரிய உண்மை.

இக்காலத்தில் வெளி வந்த "புகழ் (?!!!)" பெற்ற கதாநாயகர்கள்:

கரும்புலி ஜடாயு இந்திய  டார்ஜான் டைசன் அக்னிபுத்ரா
KarumpuliKarum Puli JadaayuJadaayu TysonTyson Agniputra Agniputra

தயவு செய்து, இதில் எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்னவென்று கேட்டு வெருபேற்றாதீர்கள், நண்பர்களே :)


எதை பதிப்பது - எதை விடுவது என்று தெரியாமல் திரு.அ.மா.சாமி, ஒரு கட்டத்தில் உலக புகழ் பெற்ற தோர்கள், மற்றும் ஹீ-மேன் கதாபாத்திரங்களை கூட ஒரு சில இதழ்களில் தோன்றி மறைய வைத்தார்.  வண்ணமிகு இதழ் என்று கூறி கொண்டு கடைசி கட்டங்களில் வெளி வந்த குப்பை ராணி காமிக்ஸ்களில் தீட்டப்பட்ட வண்ணம், நமது வீட்டு சிறுவர்கள் வரையும் ஓவியத்தை விட கேவலமாக (?!!!) வெளியானது, ராணி குழுமத்தினர், ராணி காமிக்ஸ் மேல் கொண்டு இருந்த "காதலை" பறை சாற்றும்.

தரத்தில் மட்டும் அல்ல, புத்தக வடிவைமப்பில் கூட பிரதிபலித்தது அந்த "காதல்".  வள வள அட்டை போய் "ராணி முத்து" தரத்தில் ஒரு பேப்பர் அட்டை.  புத்தக அளவு குறைந்து ரெடிமேட் கைக்குட்டைக்கு ஈடாக மாறியது. இப்படி கூறி கொண்டே போகலாம்.  ஆனால் குறைகள் மட்டுமே வாழ்கை அல்லவே.

காமிக்ஸ் ஆர்வலர்கள், ராணி காமிக்ஸின் அந்திம காலத்துக்கு முந்தய நேர்த்தி குறைந்த வெளியீடுகளை வெறுத்து ஒதுங்கினாலும், தொடர்ந்து 21 ஆண்டுகள் தங்கு தடையில்லாமல் மாதம் இருமுறை, நாள் தவறாமல் வெளிவந்த ஒரே தமிழ் காமிக்ஸ் என்ற பெருமை ராணி காமிக்ஸ் மட்டுமே சொந்தமாகும். 

மாதம் 1, மற்றும் 15 என்று புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தாலும், ஒரு நாள் முன்னேயே தவறாமல் கடைகளில் கிடைத்த ஒரே இதழ்.  என் அண்ணனுக்கும் எனக்கும் காலையில் யார் முதலில் எழுந்து கடைக்கு சென்று புத்தகம் வாங்கி முதலில் படிப்பது என்றே ஒரு போட்டி கூட இருந்தது.  எப்பவும் போல தூங்கு மூஞ்சி ஆனா எனக்கு அது சாத்திய படவில்லை.

ராணி காமிக்ஸ் தனது பயணத்தை முடித்து கொண்ட போது வருத்தம் ஏற்பட்டாலும், உள்ளுக்குள் இனிமேலும் அதன் சகாப்தத்தின் கொலையை பார்க்க மாடோம் என்ற நிம்மதி கட்டாயம் இருந்தது. 

கடைசி கால கட்டங்களில் ராணி காமிக்ஸ் வாங்குவதையே நிறுத்தி வைத்து இருந்த நான், 500 வது இதழை நெருங்கி கொண்டு இருந்த சமயத்தில் வெறும் சேகரிப்புக்கு மட்டும் வாங்குவதற்காக, நண்பர் ஒருவரின் அறிவுரைக்கு ஏற்ப, 2 வருட சந்தா கூட கட்டினேன். சந்தா ஆரம்பித்த இரண்டே மாதங்களில் ராணி காமிக்ஸ் "சுபம்" போட்டு விட, அந்த சந்தா பணமும் "ஸ்வாகா" ஆனது ஒரு தனி கதை.

எது எப்படியோ, ராணி காமிக்ஸ் இன்றும் சில வாசகர்களிடையே பசுமையான சில நினைவுகளை விட்டு சென்று இருப்பது உண்மையே.  இந்த வலைபூ மூலம் அந்த எண்ணங்களை நினைவு கூறுவதே முதற் நோக்கம்.  முதல் 90 இதழ்கள் வெளி வந்த காலம் பொற்க்காலம் என்பதால், இன்னும் பல வலை பதிவுகளுக்கு நமக்கு குறை கூறும் எண்ணம் இருக்க போவது இல்லை.  அதற்க்கு பிறகு வரும் சோக கட்டத்தை மறந்து, இந்த சுகமான எண்ணங்களிடையே சஞ்சரிக்க, நீண்டு போன முன்னோட்டத்துக்கு  இத்துடன் முற்றுபுள்ளி வைத்து விட்டு,  புத்தாண்டு முதல் ஆரம்பிப்போம்.

அதற்க்கு முன் உங்கள் மனம் கவர்ந்த கதாநயகர்கள் இவற்றில் யார், ஏன் என்று ஏன் நீங்கள் பதிய கூடாது?  வோட்டும் போடலாமே.

சிரமம் கொண்டு பதிவுகள் பதிந்தாலும், ஏனோ தங்கள் கருத்துக்களை அந்த அந்த பதிவுகளில் பதிவதில், வருகை தரும் பெரும்பாலானோரிடம் ஒரு வித தயக்கம் உள்ளது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே.  இந்த பழக்கத்தை ஒழித்து, மற்றவர்களையும் ஆர்வத்துடன் பங்கெடுக்க வைக்க என்ன மாற்றங்கள் மற்றும் புதுமைகள் செய்யலாம், என்றும் உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ளவும் ஆசை.  கண்டிப்பாக இது சம்பந்தமான உங்கள் என்னோட்டங்களையும் பதியுங்கள்.

கூடவே, இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை படிக்கும் ஆர்வத்துடன், இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

பி.கு.:

1. இந்த பதிப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து சித்திரங்களும், நமது ராணி காமிக்ஸ் பதிப்புகளின் வெவ்வேறு கால இதழ்களில் இருந்து, பிரதி எடுத்து, மேம்படுத்தி உபயகோபடுதப்பட்டுள்ளது.

2. நண்பர் சிவ், சென்ற பதிவின் பின்னூட்டத்தில், அன்றைய கால இந்திரஜால் காமிக்ஸ் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை பற்றி பதியாததை சுட்டி காட்டி இருந்தார். உண்மை தான், கிட்ட தட்ட 1980 ல் இருந்து 1989 வரை தமிழில் மொழியாக்கம் செய்து அவர்கள் வெளியிட்ட இதழ்கள், ஒரு காமிக்ஸ் பொக்கிஷம். 

ஆனால் அதன் மொழிபெயர்ப்பு ஏனோ என்னிடம் மற்ற தமிழ் காமிக்ஸ்கள் போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதே உண்மை. தமிழர்கள் முழுமையாக பங்கெடுக்காத ஒரு இதழ் என்பது அதற்க்கு ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். ஆனாலும், முழு வண்ணத்தில், வித்தியாசமான புகழ் பெற்ற கதாநாயகர்களை, தொடர்ந்து வெளியிட்ட இதழ் என்ற ஒரு தனிசிறப்பான மகுடம் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.

35 பின்னூட்டங்கள்

முன்னோட்டம் - I

காமிக்ஸ் நண்பர்களே, வணக்கம். சுய புராணம் முடிந்தது, அடுத்தது ராணி காமிக்ஸ் பற்றிய மலரும் நினைவுகளில் திளைக்கும் முன்பாக, தமிழ் காமிக்ஸ் வரலாற்றை சற்று புரட்டி பார்த்தால், ராணி காமிக்ஸ் அதற்கு அளித்த பங்களிப்பை உணர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. எனவே இந்த முன்னோட்டம்.

முத்து #1 (1972)தமிழ் காமிக்ஸ்களின் மூலம், 1972 முதல் வெளி வர தொடங்கிய முத்து காமிக்ஸ் என்று சொன்னால் மிகையாகாது. (அட்டை பட உபயம்: முத்துவிசிறி) 

"முத்து பைன் ஆர்ட்ஸ்" என்ற பெயரில் (இன்றைய பிரகாஷ் பதிபகத்தினர்), திரு.முல்லை தங்கராசனை பொறுப்பாசிரியராக கொண்டு,  வெளி வந்த முத்து காமிக்ஸ்.

அதற்க்கு முன்பு வரை பத்திரிக்கை அல்ல வார-மாத இதழ்களில் பக்க நிரப்பிகலாகவும்-ஒட்டு சுருள்கலாகவும் உபயகொப்படுத்தப்பட்டு கொண்டு இருந்த சித்திரகதைகளுக்கு, ஒரு தமிழ் காமிக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிவகையை முதலில் அறிமுகப்படுத்தியது. அதற்க்கு அவர்களுக்கு உதவியது  இங்கிலாந்தை சேர்ந்த  ஃபிலீட்வே  (Fleetway)  பதிப்பகம். 

இன்று நம் மக்களுக்கு அறிமுகம் ஆகி உள்ள அமெரிக்கன் சூப்பர் ஹீரோ காமிக்ஸை விட, கதாபாத்திர சித்தரிப்பு மற்றும் கதை களத்தில் சிறந்து விளங்கிய ஐரோப்பா காமிக்ஸ்கள், தமிழக வாசிப்பாளர்களிடம் பிரபலம் அடைந்ததில் ஆச்சர்யம் இல்லை.  அந்த கால கட்டத்தில் முத்து காமிக்ஸ் மேல் இருந்த ஒரே குறை, சீராக அதன் பதிப்புகள் வெளியிட முடியாத இயலாமையே.  அந்த குறை தீர 12 வருடங்கள் எடுத்து கொண்டது.

1984 தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் பொன் எழுத்துகளில் பதிக்க பட வேண்டிய ஒரு வருடம்.  இந்த வருடத்தில் தான் மூன்று புதிய தமிழ் சித்திரகதை புத்தகங்கள் தங்கள் பயணத்தை ஒரே நேரத்தில் தொடங்கின (ஜூலை ‘84).

Lion Comics Logo

முதலாமாவது, முத்து காமிக்ஸ் பதிப்பகத்தினரின் இன்னுமொரு படைப்பு - லயன் காமிக்ஸ், திரு.S.விஜயனை பொறுப்பாசிரியராக கொண்டு, தெற்காசியாவின் பட்டாசு தலைநகரமான சிவகாசியில் இருந்து.

Mehta Comics Logo

இரண்டாவது, அவர்களுக்கு போட்டியாக அவர்கள் ஊரில் இருந்தே வெளிவந்த மேத்தா காமிக்ஸ், (இச்சமயத்தில் கட்சி தாவி இருந்த) திரு.முல்லை தங்கராசனை பொறுப்பாசிரியராக கொண்டு.

Rani Comics Logo

மூன்றாவது, பிரபலமான தின-தந்தி பதிபகத்தினரின் அரவணைப்பில் உருவான நமது வலைபூ கதாநாயகர் -
ராணி காமிக்ஸ், தமிழக தலைநகர் சென்னையிலிருந்து.  இதற்க்கு பொறுப்பாசிரியராக நியமிக்க பட்டவர் திரு.S.ராமஜெயம்.

வித்தியாசமான கதாநாயகர்கள், கதை தரம், புத்தக அமைப்பு, வள-வள அட்டை படங்கள், கண்ணை பறிக்கும் ஓவிய அச்சு, தரமான மொழிபெயர்ர்ப்பு, என்று  முதல் முறையாக ஒரு மும்முனை போட்டியை தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் பார்க்க நேர்ந்தது.  இந்த போட்டியில் மேத்தா காமிக்ஸ் ஆரம்ப வருடங்களிலேயே கடை மூடி விட, ராணி காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் இடையே ஒரு நேருக்கு-நேர் போட்டி உதயமானது.  இடைப்பட்ட காலத்தில், சில முறை திடீர் திடீர் என்று உதயமாவதும் மறைவதுமாக மேத்தா காமிக்ஸ் கண்ணாம்பூச்சி ஆடி கொண்டு இருந்தது.

ஆரம்பத்திலேயே லயன் காமிக்ஸை முந்தி கொண்டு, புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்டு (James Bond 007) கதைகளை தன் வசம் செய்த ராணி காமிக்ஸ், முத்து மற்றும் லயனின் பாரம்பரிய ஃபிலீட்வே பதிப்பகத்திலும் கை வைத்து, குதிரை வீரர்கள் (Cow-Boy), மற்றும் துப்பறியும் சாகசங்களையும் அதன் இதழ்களில் வெற்றி நடை போட வைத்தது.  

இந்த ஆரம்ப கட்ட போட்டியில், ராணி காமிக்ஸ் முன்னிலை படுத்தப்பட்டதற்கு முதற்-முதல் காரணம், தின-தந்தி என்ற பெரிய குழுமத்தின், அசைக்க முடியாத முகவர் வட்டம் (விற்பனை பிரதிநிதிகள்).  நகரங்கள் முதற் கொண்டு, பட்டி-தொட்டி, பெட்டி கடை எங்கும் தங்கள் காமிக்ஸ்களை சரளகமாக விற்பனை செய்ய அது உதவியது.

இன்னொரு காரணம், அதன் விலை.  லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் தனது அமைப்பு, மற்றும் கதை நீளத்தின் அடிப்படையில் அதன் விலையை அவ்வப்போது மாற்றி கொண்டு இருந்த போது, அதே அளவு மற்றும் பக்கங்கள் கொண்டு, ரூ.1.50 என்ற விலையில் கிட்ட தட்ட 4 வருடம்  சீராக வெளியிட்ட ராணி காமிக்ஸ், சாமானிய வாசகனுக்கு சென்று அடைவதில் சிக்கல் ஏற்பட வில்லை.  அதற்கு பிறகும் கூட ரூ.2 விலையை 10 வருடங்கள் தொடர்ந்த சாதனையும் அவர்களுக்கே உரித்தாகும்.  சீரான விலையுடன், அதே தரத்தில் வெளி வந்த ராணி காமிக்ஸ், ஒரு வழியாக வெகு ஜன வாசகர்களின் பிரியமான இதழனாது, நான் உட்பட.  அதன் விளைவே இந்த வலைபூ.

ராணி காமிக்ஸ் எவ்வளவு தான் சாதனைகள் செய்தாலும், கடைசியில் இன்று விஞ்சி நிற்பது முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் மட்டுமே (அதற்க்கு காரணம் பின்-புலத்தில் திரு.சவுந்தரபாண்டியன், மற்றும் திரு.விஜயன் அவர்களின், அசையாத காமிக்ஸ் மேல் கொண்ட காதல்).  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, கால போக்கில், கதை தேர்வு, மற்றும் மோசாமான மொழிபெயர்ப்பில் ராணி காமிக்ஸ் உழன்று, வாசகர்கள் மனதில் இருந்து அறவே ஒழிந்து போனது.

இதன் அடிப்படையில் ராணி காமிக்ஸ் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது, அதை மூன்று கால கட்டங்களில் வரையறுக்கலாம்:

  • பொற்க்காலம்
  • வசந்தக்காலம்
  • இருண்டக்காலம்
இந்த கால கட்டங்கள் ராணி காமிக்ஸ்க்கு எவ்வகையில் பொருந்தும் என நான் ஒரு எண்ணம் வகுத்து இருக்கிறேன்.  அதை பற்றி அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.  என்னடா, ஏதோ மெகா சீரியல் போல இழுவையா - என்று எண்ண வேண்டாம்.  காமிக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தாலே, நேரம் போவது தெரியாது (குறைந்த பட்சம், என்னை பொறுத்த வரை).  அது எழுத்து வடிவத்திலும் தொடர்ந்த காரணத்தால், முன்னோட்டம் நீண்டு போயிற்று.  வேறு வழியில்லாமல், இரண்டு பதிவாக போட வேண்டிய நிலைமை.  எனவே முன்னுரை நிறைவு பதிவு, சில நாட்களில் வெளியிடப்படும்.

அதற்க்கு முன், இந்த முன்னோட்ட பாகத்தை பற்றியும், உங்கள் எண்ணங்களில் ராணி காமிக்ஸ் கால கட்டம் எவ்வகைபடும் என்றும், நீங்கள் ஏன் உங்கள் கருத்துக்களை பதிய கூடாது?

உங்கள் கருத்துக்களை படிக்கும் ஆர்வத்துடன், இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

பி.கு.: என்னுடைய முந்தய பதிவை வந்து பார்த்து தங்களது கருத்துக்களை பதிந்த அனைவருக்கும் நன்றி.  நாள் தோறும் வருகை தரும் எண்ணற்ற அன்பர்களிடம், அடுத்த பதிவு போட ஏற்பட்ட கால தாமதத்துக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.  கூட்டணி என்றாலே பிரச்சனை தான், அரசியலிலும் சரி, பதிவுலகத்திலும் சரி. 

கூட்டு வலைப்பதிவு என்று கூறி விட்டு நான் மட்டுமே வண்டி ஓட்ட கூடாது என்ற எண்ணத்தில், ஏனைய வலைப்பூ தமிழ் காமிக்ஸ் அன்பர்களை அழைத்து, ஒரு மித்த கருத்து கொண்டு வரவே இக்கால தாமதம். அதற்க்கு இன்னும் நேரம் கூடவில்லை. அது வரை இரட்டை மாட்டு வண்டி தான் கதி, எனவே தாமதம் ஏற்படின் மன்னிக்கவும்.

17 பின்னூட்டங்கள்

சுய புராணம்

அன்பிற்கினிய தமிழ் வாசகர்களுக்கு, என் முதற்கண் smileவணக்கம்.  கடந்த 2 வருடங்களாக "காமிக்கியல்" என்ற பெயரில் காமிக்ஸ் உலகத்தை பற்றிய ஒரு வலைபதிவேடை நான் நடத்தி வந்ததாலும், தமிழில் முழுக்க முழுக்க ஒரு வலைபதிவேடை ஆரம்பிப்பது எனக்கு ஒரு புது முயற்சியே.  வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறப்பதை என்னால் உணர முடிகிறது.

2005'ல் நான் வலைப்பதிவேடு ஆரம்பித்த போது, எனக்கு இருந்த உந்து சக்தி,
முத்து விசிறியின் வலைப்பக்கம் தான். அப்போது தான், தமிழில் பல வலைபூ நடத்தி, பிறகு அதை செப்பனிடுவதில் ஏற்படும் வேலை பளுவை காரணம் காட்டி அவர் பிளாக்கரை தஞ்சம் அடைந்து இருந்தார்.

அவருக்கு அந்த யோசனைக்கு மூலம், பல காமிக்ஸ் ப்ளாக்குகளுக்கு ஒரு முன்னுதாரனமான திகழ்ந்த (திகழும்) த காமிக் ப்ராஜக்ட் என்ற அன்பர் தான். அந்த அனாமதேய நண்பரும், ஒரு தமிழர் என்பது துணை செய்தி. 

TamilNet அந்த சமயத்தில், உண்மையிலேயே தமிழில் வலைபூ நடத்துவதற்கு இருந்த வசதிகள் மிகவும் குறைவே.  எண்ணற்ற தமிழ் எழுத்து வடிவங்கள், முறையில்லாத விசைபலகைகள்.  பள்ளி பருவத்தில் தமிழ் தட்டச்சு பயின்ற போது, கணினியில் ஒரு கலைபனியே நடத்தலாம் என்று இருந்த நான், அதற்க்கு பிறகு கணினிக்கு என்று தனி விசைபலகை உருவான போது அடைந்த ஏமாற்றத்துக்கு அளவே இல்லை.

எனவே, முத்து விசிறியின் அனுபவத்தை பாடமாக கொண்டு, நானும் ஆங்கிலத்தை அடிபடையாக கொண்டு, எனது முதல் வலைப்பூவை ஆரம்பித்தேன். அதுவும் நல்ல முறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமீப காலமாக ஒரு புதிய உத்வேகத்தை தமிழ் Chennai Blog Campவலைபதிவேடுகளில் காண முடிகிறது. எண்ணற்ற நண்பர்கள் தங்கு தடையில்லாமல் நமது தாய் மொழியில் அளவாடுவதும், தங்குளுக்குள் ஒரு கூட்டணி அமைத்து, சந்திப்புகளில் அவர்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை பறிமாறிகொள்வதும் என்று களைகட்டுகிறார்கள். இவற்றை பார்த்து நாமும் ஏன் பங்கெடுக்க கூடாது என்று ஆசை அவ்வபோது தோன்றிது நியாயமே, என்றாலும் ஒரு வலைபூ நடத்தவே தாவு தீருகிறது, இதில் இன்னொன்றா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

ஆனால் பங்கு வேட்டையர் ஜோஸ் மற்றும் காமிக்ஸ் டாக்டர் சதீஷ் தங்கள் காமிக்ஸ் அனுபவங்களை தமிழில் பதிய ஆரம்பித்தவுடன், நாமும் களத்தில் குதிப்பதற்கு இதுவே  சரியான நேரம் என்று தோன்றியது.  அதன் விளைவே இந்த வலைபூ.

சரி முடிவெடுத்து விட்டோம், ஆனால் எதை மையமாக கொண்டு எழுத ஆரம்பிப்பது என்று ஒரு சங்கோஜம். 

  • பழைய முத்து காமிக்ஸ் பற்றியோ, லயன் காமிக்ஸ் பற்றியோ நான் பேசுவது அவ்வளவு சரியாக இருக்காது, அந்த பெருமை நெடு நாள் வாசகர் ஆன முத்து விசிறி’க்கு  மட்டுமே உகந்ததாகும்.
  • மற்ற தமிழ் காமிக்ஸ்’க்களை பற்றி விஸ்வா அவர் வலையேட்டில் சிறப்பாக பதிந்து வருகிறார். 
  • வாண்டுமாமா, பூந்தளிர், ரத்னபாலா, அம்புலிமாமா போன்ற சிறுவர் இலக்கியங்களை அய்யம்பாளையம் வெங்கடேஷ்வரன் தனது புதிய வலைபூவுக்கு குத்தகை எடுத்து விட்டார்.

விட்டு போனது ராணி காமிக்ஸ் மட்டுமேஉண்மையை சொல்வதென்றால் நான் சிறு வயதில் அதிகம் படித்தது ராணி காமிக்ஸ்.  சரியாக 500 புத்தங்கங்களை தங்கு தடையில்லாமல் வெளியிட்ட ஒரு நிறுவனம்.   ஒரு வகையில் நான் தமிழ் படிக்க கற்று கொண்டதே  ராணி காமிக்ஸின் முதல் 5 இதழ்களை படித்து தான்.  முத்துவும், லயன் காமிக்சும் அறிமுகம் ஆனது அதற்கு பிற்பாடே.

ஆகவே, இந்த வலைப்பதிவை சாக்காக வைத்து கொண்டு அந்த பழைய புத்தங்களை மறுபடியும் படிக்க ஒரு காரணம் கிடைக்கும் போது அதை விடுவானேன். 

என்னப்பா இன்னும் ஒரு வலை பதிவேடா? இந்த ஆளுக்கு வேற வேலை வெட்டி கிடையாதா என சில கூக்குரல்கள் எழும் என்று அறியேன்.  ஒரே சமயத்தில் இரண்டு வலை பதிவேடுகளை பேணி காப்பது எவ்வளவு கஷ்டமான ஒன்று என்பதை நானும் அறிவேன். அதுவும் நம்முடைய வேலை பளுவுக்கு நடுவே அது ஒரு இயலாத காரியம்.  ஆரம்பத்தில் காமிக்கியல் ஆரம்பித்த போது எனது எண்ணம், அதை ஒரு கூட்டு முயற்சியாக மாற்றுவது தான். ஆனால் அப்போது அதற்கு சரியான வழி வகை அமையவில்லை. கடைசியில் "நானே ராஜா, நானே மந்திரி" என்ற முறையில் அதை நடத்த வேண்டியதாகி ஆகி விட்டது.

ஆனால் இம்முறை, இது ஒரு கூட்டு தாக்கு. முதலில் கூட்டு சேர்ந்து உள்ளவர், நமது "வேதாள உலக" எழுத்தர், மற்றும் 'பங்கு வேட்டையர்'  ஜோஸ்.  ஏனைய நமது சக பதிவர்களுக்கும் அழைப்பு அனுப்ப உத்தேசம்.  இவ்வழியே ஒருவர் மாற்றி ஒருவர், அவர் அவர் வசதிகேற்ப, நேரம் தவறாமல், பதிவிட இயலும். 

இக்கூட்டணி, 'லாரன்ஸ் & டேவிட்' போன்ற அதிரடி கூட்டியா, அல்ல 'மாண்டிரெக் & லூதர்' போல மந்திர கூட்டணியா, அல்ல 'கவுண்டமணி & செந்தில்' போல காமெடி கூட்டணியா (?!!!) என்பது நீங்கள் போடும் பின்னூட்டங்கள் மூலம் மட்டுமே அறிய முடியும்.  அதனால், வருகை தரும் அனைவரும் உங்கள் கருத்தை பதிந்து விட்டு செல்லுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

இந்த பதிவு மிகவும் நீண்டு கொண்டே செல்வதால், என் மொக்கையை இத்துடன் முடித்து கொண்டு, ராணி காமிக்ஸின் முதல் இதழை, விமர்சிப்பதற்கு முன், ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு சிறு அறிமுக பதிவோடு அடுத்து சந்திக்கிறேன்.  தொடரும் பதிவில்,  பங்கு வேட்டையர் அவர் பாணியில் புகுந்து விளையாடுவார்.

பி.கு.: முதன் முதலில் என்னை தமிழில் பதிய அழைப்பு அனுப்பிய சக பதிவர், மற்றும் தற்போதைய எழுத்தாளர், 'லக்கி லுக்'கிற்கும், விடாமல் என்னை தமிழில் எழுத அறைகூவல் விட்டு கொண்டே இருந்த நண்பர் 'ஜோஸ்'சுக்கும் என் நன்றிகள்.

29 பின்னூட்டங்கள்